விருதுநகர் மாவட்டத்தில் அரசுப்பள்ளி வளாகத்தில் தேங்கி நிற்கும் மழைநீர் - கழிவு நீர் கலந்ததால் துர்நாற்றம், நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
Aug 23 2019 1:17PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பகுதி அரசுப்பள்ளியில் தேங்கி நிற்கும் மழைநீரால், தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக, பெற்றோர் மற்றும் மாணவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
விருதுநகர் அருகே காரியாபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், சுமார் ஆயிரத்து 300 மாணவிகள் பயின்று வருகின்றனர். அண்மையில் பெய்த மழையால், பள்ளி வளாகம் மற்றும் சுற்றியுள்ள பகுதியில், மழை நீர் தேங்கியுள்ளது. மேலும் கழிவுநீரானது மழைநீருடன் கலந்துள்ளதால், துர்நாற்றம் வீசுவதோடு, தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இது குறித்து பேரூராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.