மத்திய பா.ஜ.க. அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் : மக்களுக்கு எதிரான சட்டங்கள் இயற்றி வருவதற்கு கண்டனம்
Aug 26 2019 12:59PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மத்திய பா.ஜ.க. அரசு, மக்களை பழிவாங்கும் நோக்கத்தோடு சட்டங்களை இயற்றி வருவதைக் கண்டித்து, சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில், சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகே, மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து - முத்தலாக் தடை மசோதா என இஸ்லாமிய மக்களுக்கு எதிரான சட்டங்களை தொடர்ந்து பாஜக அரசு இயற்றி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. மத்திய அரசு காஷ்மீர் மக்களுக்கு துரோகம் செய்துவிட்டது என்றும், இது ஜனநாயக படுகொலை என்றும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அரசியல் கட்சி தலைவர்கள் தெரிவித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் திரு. ஆர்.எஸ். பாரதி, மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு. திருமுருகன் காந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் குழுத் தலைவர் திரு. ஜி. ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.