இலவச மருத்துவ முகாமில், இருதய நோயால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் - மருத்துவ குழுவினர் அதிர்ச்சித் தகவல்
Sep 16 2019 8:00PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கன்னியாகுமரி மாவட்டத்தில் சுழற்சங்கம் சார்பில் நடத்தப்பட்ட இலவச மருத்துவ முகாமில், இருதய நோயால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட்டு வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
பிறந்த குழந்தை முதல் 16 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இருதய நோய் கண்டறிதல் இலவச முகாம் நடைபெற்றது. தமிழக அரசு முன்வராத நிலையில், சுழற்சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த முகாமில், முகாமிற்கு வருகை தந்த குழந்தைகளில் ஏராளமான குழந்தைகளுக்கு இருதய நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவ குழுவினர் தெரிவித்தனர்.