கும்பகோணத்தில், தந்தை பெரியாரின் 141-வது ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு, கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மாலை அணிவித்து மரியாதை
Sep 17 2019 12:23PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 141-வது ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு, இன்று, கும்பகோணம் பழைய பேருந்துநிலையம் அருகில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு, அம்மா மக்கள் முன்னேற்றக்கழகப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
ஈடு இணையற்ற திராவிட சிந்தனையாளர், சமூக நீதிக்காக வாழ் நாளெல்லாம் பாடுபட்டவர், பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 141-வது ஆண்டு பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, இன்று காலை 10.30 மணியளவில், கும்பகோணம் பழைய பேருந்துநிலையம் அருகில் உள்ள தந்தை பெரியாரின் திருவுருவச் சிலைக்கு, கழகப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
இந்நிகழ்வில், தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்டக்கழகச் செயலாளர்கள், நிர்வாகிகள், சார்பு அணிகளின் செயலாளர்கள், நிர்வாகிகள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்டக்கழக, கிளைக்கழகச் செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் திரளாக பங்கேற்க உள்ளனர்.