தொன்மையான மொழி பேசும் தமிழர்கள் எப்படி நன்றி மறப்பார்கள்? - திருநாவுக்கரசர்
Sep 17 2019 12:48PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழ் தொன்மையான மொழி என்றால், தொன்மையான மொழி பேசும் தமிழர்கள் எப்படி நன்றி மறந்தவர்களாக இருப்பார்கள் என திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
மதுரையில் இருந்து சென்னை வந்த திரு. திருநாவுக்கரசர், விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழர்கள் குறித்த முன்னாள் மத்திய அமைச்சர் திரு.பொன் ராதாகிருஷ்ணனின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். தேர்தலில் தோல்வியடைந்த விரக்தியில் திரு.பொன் ராதாகிருஷ்ணன் இவ்வாறு பேசியிருப்பதாகவும் தெரிவித்தார்.