தி.மு.க. பிரமுகர் வீட்டில் இருந்து 12 கிலோ கஞ்சா பறிமுதல் - விருதுநகர் அருகே தனி காவல்படை நடவடிக்‍கை

Sep 22 2019 3:52PM
எழுத்தின் அளவு: அ + அ -

விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி அருகே தி.மு.க. பிரமுகர் வீட்டில் மறைத்து வைக்‍கப்பட்டிருந்த 12 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

காரியாப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாகவும், இதனால் இளைஞர்களும், மாணவர்களும் பாதிக்‍கப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன. இதன் அடிப்படையில், காவல்துறையினர் சோதனை நடவடிக்‍கையில் இறங்கினர். பள்ளப்பட்டி பகுதியைச் சேர்ந்த தி.மு.க. பிரமுகர் சாமிக்‍கண்ணு என்பவரது வீட்டில் கஞ்சா பதுக்‍கி வைக்‍கப்பட்டிருப்பதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் அங்கு சோதனை செய்தனர். இந்த சோதனையில், 8 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்‍கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவரது உணவகத்திலும் சோதனை நடத்தப்பட்டது. அங்கும் சுமார் 4 கிலோ அளவுக்‍கு கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 12 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து, சாமிக்‍கண்ணு, அவரது மனைவி மகேஸ்வரி மற்றும் அவர்களுக்‍கு உடந்தையாக இருந்த குருசாமி, காண்டீபன் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். தி.மு.க. பிரமுகர் சாமிக்‍கண்ணு மீது ஏற்கெனவே கஞ்சா வழக்‍கு இருந்து வந்தது குறிப்பிடத்தக்‍கது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00