இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது : மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிவிப்பு
Sep 22 2019 4:08PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இடைத்தேர்தல் எனும் ஊழல் நாடகத்தில் மக்கள் நீதி மய்யம் பங்கெடுக்காது என தெரிவித்துள்ளார். 2021-ல் ஆட்சிப் பொறுப்பினை கைப்பற்ற மக்கள் நீதி மய்யம் முனைப்போடு, விரைவாக முன்னேறி வருவதாக கமல்ஹாசன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.