கன்னியாகுமரியில் 50 அடி ஆழ பள்ளத்தில் தள்ளி மனைவி கொலை : கணவர் கைது

Sep 22 2019 5:58PM
எழுத்தின் அளவு: அ + அ -

கன்னியாகுமரி அருகே சிலுவை நகர் பகுதியில் மனைவியை 50 அடி ஆழ பள்ளத்தில் தள்ளி தலையில் கல்லை போட்டு கொலை செய்ததாக அவருடைய கணவர் கைது செய்யப்பட்டார்.

சிலுவை நகர் பகுதியைச் சேர்ந்த அருள் சுனிதாவுக்கும், அவரது கணவர் மரியடல்லசுக்கும் திருமணமாகி 17 வருடங்கள் ஆகின்றன. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கிறார்கள். கணவன், மனைவி இருவரும் கன்னியாகுமரியில் வியாபாரம் செய்து வருகின்றனர். இவர்களுக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதால், ஆத்திரமடைந்த மரியடல்லஸ், மனைவியை ஓட ஓட விரட்டி வீட்டின் முன்புறம் இருந்த 50 அடி ஆழ பள்ளத்தில் தள்ளிவிட்டு, தலையில் கல்லை போட்டார். படுகாயமடைந்து, ரத்த வெள்ளத்தில் துடித்த அருள்சுனிதா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவரது தாயார் கன்னியாகுமரி காவல்நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், மரியடல்லஸை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00