சென்னையில் தனியார் கல்லூரியில் 10 லட்சம் விதைப் பந்துகள் செய்யும் விழா : புவி வெப்பமயமாதலை தடுக்க மாணவர்கள் விழிப்புணர்வு
Sep 22 2019 6:04PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 10 லட்சம் விதைப் பந்துகள் செய்யும் நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
புவி வெப்பமயமாதலுக்கு எதிராக பல்வேறு இடங்களில், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில், மாணவர்களுக்கு விதைப்பந்து செய்வது குறித்தும் அதனுடைய பயன்பாடுகள் பற்றியும் விளக்கமளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்கள், மரம் வளர்த்து இந்தியாவை காப்போம் என உறுதிமொழி எடுத்து கொண்டுனர்.