நாளை முதல் நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி - காலை, மாலை வேளைகளில் நடத்த பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு
Sep 23 2019 3:53PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நாளைமுதல் தொடங்கவுள்ளதாக, பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ப்ளஸ் 2 மாணவர்களுக்கு, தமிழக அரசின் சார்பில் நடத்தப்படும் இலவச நீட் பயிற்சி வகுப்புகள், நாளை முதல் தொடங்குகின்றன. இது தொடர்பான அறிவிப்பை பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள 413 பயிற்சி மையங்களில், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு இப்பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சி பெற்ற 320 ஆசிரியர்களை கொண்டு ETOOS INDIA நிறுவனம் மூலம், மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலாண்டுத் தேர்வு விடுமுறை நாட்களிலும், தொடர்ச்சியாக 5 நாட்கள் வகுப்புகள் நடைபெறும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறைகளில் நடைபெறும் பயிற்சி வகுப்புகளில், இரண்டு நாட்களுக்கு ஒருமுறை தேர்வு நடத்தப்படும் என்றும், பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.