நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு - கைதான மாணவர்கள் ராகுல், பிரவீன் ஆகியோரது ஜாமின் மனுக்களை தள்ளுபடி செய்தது தேனி நீதிமன்றம்
Oct 15 2019 5:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மாணவர்கள் ராகுல் மற்றும் பிரவீன் ஆகியோரது ஜாமின் மனுக்களை தள்ளுபடி செய்து தேனி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் மாணவி கைது செய்த புகாரில், தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் படித்து வந்த, சென்னை மாணவர் உதித்சூர்யா, சென்னையிலுள்ள தனியார் கல்லூரிகளில் பயின்று வந்த மாணவர்கள் பிரவீன், ராகுல் மற்றும் வேலூரை சேர்ந்த மாணவர் இர்பான் ஆகிய நால்வரும், அவர்களது தந்தையுடன் கைது செய்யப்பட்டனர். அண்மையில் சென்னையிலுள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் பயின்று வந்த மாணவி பிரியங்கா அவரது தாயோடு கைது செய்யப்பட்டார். சிறையில் உள்ள பிரவீன் மற்றும் அவரது தந்தை சரவணன், ராகுல் மற்றும் அவரது தந்தை டேவிஸ் ஆகியோர், ஜாமின் கேட்டு கடந்த மாதம் 30-ம் தேதி தேனி நீதித்துறை நடுவர் விரைவு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி பன்னீர்செல்வம், நான்கு பேரின் ஜாமின் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். முன்னதாக, மாணவர் இர்பானின் நீதிமன்ற காவலை வரும் 25-ம் தேதி வரை நீட்டித்து தேனி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.