புதுக்கோட்டை அருகே மின்னல் தாக்கி 4 பேர் உயிரிழப்பு, 20-க்கும் மேற்பட்டோர் காயம் - வயலில் வேலை பார்த்தபோது பரிதாபம்
Oct 15 2019 8:08PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரத்தில், நடவு வேலையில் ஈடுபட்டிருந்த 5 பேர் இடி தாக்கி உயிரிழந்தனர். படுகாயமடைந்த இருபதிற்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டை அருகே வைத்தூர் கிராமத்தைச் சேர்ந்த 25-க்கும் மேற்பட்டோர் நடவு பணிக்காக கீழ முட்டுக்காடு கிராமத்திற்கு சென்றனர். மழை பெய்த நிலையிலும் அவர்கள் நடவுப் பணியை தொடர்ந்தனர். அப்போது, இடி தாக்கியதில் விஜயா, லட்சுமி, கலைச்செல்வி, சாந்தி ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 25க்கும் மேற்பட்டோர், புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் ஊரணிக்கோட்டை கிராமத்தில், வயலில் களை எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மலர் என்ற பெண், மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த மேலும் இருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.