நீலகிரி மாவட்டத்தில் கனமழையால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்பு : நிலச்சரிவின்போது செல்போனில் பதிவான பதைபதைக்கும் காட்சிகள்
Oct 16 2019 1:35PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நீலகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக 10-க்கும் மேற்பட்ட சாலைகளில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூர், குந்தா, கோத்தகிரி ஆகிய பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. நேற்று மாலை பெய்த கனமழை காரணமாக உதகை - குந்தா சாலையில் குந்தா அணை அருகே 5-க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவு ஏற்படும்போது முன்னெச்சரிக்கையாக வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. இக்காட்சிகள் மொபைல்போனில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சாலைகளில் பாறைகள், மண் குவியல்கள் குவிந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பொதுமக்கள், பள்ளிக் குழந்தைகள் நடந்தே சென்றனர். இதேபோல் குன்னூர் - மேட்டுபாளையம் சாலையில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.