புழல் மத்திய சிறையில் போலீசார் திடீர் சோதனை - 50க்கும் மேற்பட்ட போலீசார் செல்போன், கஞ்சா புழக்கம் குறித்து ஆய்வு
Oct 16 2019 2:17PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புழல் மத்திய சிறையில் செல்போன், கஞ்சா போன்றவை புழக்கத்தில் இருக்கிறதா என்பது குறித்து, 50-க்கும் மேற்பட்ட போலீசார் சோதனை நடத்தினர்.
புழல் மத்திய சிறையில் செல்ஃபோன், கஞ்சா போன்றவை புழக்கத்தில் உள்ளதாக அவ்வவ்போது செய்திகள் வெளியாகி வருகின்றன. இதற்காக காவல்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டு, செல்ஃபோன்களை பறிமுதல் செய்து வருகின்றனர். அந்த வகையில், விசாரணை, தண்டனை மற்றும் மகளிர் சிறை பிரிவுகளில் செல்போன், கஞ்சா, மொபைல் போன் ஏதும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து இன்று சோதனை நடைபெற்றது. காலை 6 மணி முதல் துணை காவல் ஆணையர் திருமதி ரவளி பிரியா தலைமையில், 50-க்கும் மேற்பட்ட போலீசார் இந்த சோதனை மேற்கொண்டனர்.