திருச்சி லலிதா ஜுவல்லரி கடை கொள்ளை சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட வேன் பறிமுதல் - சம்பவத்தில் கைதாகியுள்ள கணேசன் அளித்த தகவலின்படி 3 பேரிடம் விசாரணை
Oct 19 2019 2:45PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சி வங்கி மற்றும் நகைக்கடை கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட சுற்றுலா வேனை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக்கடை கொள்ளைச் சம்பவம் தொடர்பாக இதுவரை 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட கணேசன் அளித்த தகவலின் பேரில் பஞ்சாப் நேஷனல் வங்கி,லலிதா ஜுவல்லரி கொள்ளைக்கு பயன்படுத்திய சுற்றுலா வேனை திருச்சியில் போலீசார் பறிமுதல் செய்தனர். போலீசாருக்கு சந்தேகம் வராமல் இருக்க முருகன் கும்பல் சுற்றுலாப்பயணிகள் போல் வேனில் தப்பி சென்றதும் விசாரணையில் தெரியவந்தது. கணேஷன் அளித்த தகவலின்பேரில் பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளை தொடர்பாக 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கணேசனை மதுரை வாடிப்பட்டி, சமயநல்லூர் ஆகிய இடங்களுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தவும் தனிப்படை போலீசார் திட்டமிட்டுள்ளனர்.