சீன அதிபரின் வருகைக்குப் பிறகு மவுசு கூடும் மகாபலிபுரம் - வெண்ணெய் உருண்டை பாறையைக் காண கூடுதல் கட்டணம்
Oct 19 2019 3:59PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் அமைந்துள்ள வெண்ணை உருண்டை பாறை உள்ளிட்ட புராதன சின்னங்களைக் காண கட்டணமாக நபருக்கு 40 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மாமல்லபுரத்தில் கடந்த வாரம் சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் பிரதமர் திரு. நரேந்திர மோடியும் மாமல்லபுரத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்காக மாமல்லபுரத்தில் உள்ள வெண்ணை உருண்டை பாறை உள்ளிட்ட புராதன சின்னங்கள் சுத்தம் செய்யப்பட்டு விளக்குகளின் ஒளியில் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. இதனைத் தொடர்ந்து மாமல்லபுர சிற்பங்களுக்கு மவுசு பெருகியது. இந்த நிலையில், சுற்றுலாப் பயணிகளுக்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 10 ரூபாயாக இருந்த கட்டணம் 40 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.