ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆழ்கடல் மீன்பிடித்தல் குறித்த பயிற்சி முகாம் - 50க்கும் மேற்பட்ட மீனவர்கள் பங்கேற்பு
Oct 19 2019 3:58PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் உள்ள மத்திய மீன்வள ஆராய்ச்சி மையத்தில், ஆழ்கடல் மீன்பிடித்தல் குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது.
தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பகுதியில் வாழும் மீன்களை மீனவர்களுக்கு நவீன மீன்பிடிக்கும் உத்திகள் குறித்து மீன் வளத்துறை மற்றும் மீன் வள ஆராய்ச்சியாளர்கள் மீனவர்களியிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், மத்திய கடல் மீன் வள ஆரய்ச்சி மைய மூத்த விஞ்ஞானி ஜெயகுமார், ராமநாதபுரம் மீன் வளத்துறை இணை இயக்குநர் காத்தவராயன் நாட்டு படகு மற்றும் விசை படகு மீனவர்கள் என 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.