சென்னை வண்ணாரப்பேட்டையில் தான் படித்த பள்ளியின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றிய காவல் ஆய்வாளர்
Oct 19 2019 4:05PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை வண்ணாரப்பேட்டையில் தான் படித்த பள்ளியின் அடிப்படை தேவைகளை பெண் காவல் ஆய்வாளர் பூர்த்தி செய்து வருவதை அப்பகுதி மக்கள் வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.
சென்னை வண்ணாரப்பேட்டையில் 1941 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பள்ளியில் பயின்ற காஞ்சனா என்பவர், தற்போது கிண்டி காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். தான் கல்வி பயின்ற பள்ளியின் அவல நிலை குறித்து அறிந்த காஞ்சனா, நன்றிக்கடனாக பள்ளியின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்துள்ளார். பொலிவிழந்து இருந்த கட்டிடத்தை வர்ணம் பூசி புதுப்பித்ததோடு மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி உற்சாகப்படுத்தினார்.