தமிழகத்தில் வேகமாக பரவும் டெங்கு : ஒரே நாளில் மூன்று சிறார்கள் உயிரிழப்பு
Oct 19 2019 5:19PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் டெங்கு பாதிப்பால் ஒரே நாளில் மூன்று சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தேவதானம் பகுதியைச் சேர்ந்த தண்டபாணி காஞ்சனா தம்பதியின் மூன்று வயது மகளான ராஜகுமாரி அப்பகுதியில் உள்ள அங்கன்வாடியில் பயின்று வந்தார். கடந்த 14 நாட்களுக்கு முன்பு அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் சிறுமி அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல் குறையாத நிலையில், சிறுமி உயிரிழந்தார். பிறந்த நாளின்போது சிறுமி உயிரிழந்தது உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் ஏமூரைச் சேர்ந்த கோபி என்பவரது மகள் வைஷ்ணவி கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதையடுத்து கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிப்பட்ட வைஷ்ணவியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமிக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதை உறுதி செய்தனர். இதையடுத்து சிறுமிக்கு மேல் சிகிச்சை அளிக்க திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். திருச்சி அனுமதிக்கப்பட்ட சிகிச்சைப் பெற்று வந்த வைஷ்ணவி இன்று உயிரிழந்தார்.
இதேபோல், தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியைச் சேர்ந்த அவினாஷ் என்ற சிறுவன் டெங்கு காய்ச்சலுக்காக மருத்துவமனையில் அனுமதிப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி சிறுவர் உயிரிழந்தான்.