தனுஷ்கோடி அருகே ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்ததால் மீனவர்கள் அதிர்ச்சி - மீன்களின் இறப்புக்கான காரணம் தொடர்பாக ஆய்வு

Oct 19 2019 4:18PM
எழுத்தின் அளவு: அ + அ -

தனுஷ்கோடி அருகே கோதண்டராமர் கோயில் கடலோரப்பகுதிகளில் மர்மமான முறையில் பல ஆயிரக்கணக்கான மீன்கள் செய்து மிதந்ததால் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்கோடி அருகேயுள்ள கோதண்டராமர் கோவில் பகுதியில் அமைந்துள்ள சதுப்பு நிலப்பரப்பில் மழைநீர், மற்றும் கடல் நீர் தேங்கியுள்ளது. இதில் ஆயிரக்கணக்கான ஒய்லி வகை மீன்கள் செய்து மிதப்பதை கண்ட ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். மீன்வளத்துறை அதிகாரிகள் மண்டபம் கடல் மீன் ஆராய்ச்சி நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். மேலும் இறந்த மீன்களை ஆய்வு செய்த விஞ்ஞானிகள், நீரின் வெப்ப அளவு அதிகரித்ததால் அவை இறந்திருக்கலாம் என்று குறிப்பிட்டனர். ஆய்வுக்கு பின்னரே முழு தகவல் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தனர். இதனையடுத்து நகராட்சி சார்பில் அப்பகுதிகளில் தொற்று பரவாமல் இருக்க பிளிச்சிங் பவுடர் மற்றும் பினாயில் தொளிக்கப்பட்டது. மேலும் இறந்த மீன்களை உணவுக்கு பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்திய அதிகாரிகள் இறந்த மீன்களை சேகரித்து மணலில் புதைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00