21 நிமிடம் தொடர்ந்து யோகாசனம் செய்து சாதனை முயற்சி : 1,201 பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்பு
Oct 22 2019 11:36AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சியில் தனியார் பள்ளியை சேர்ந்த ஆயிரத்து 201 மாணவ மாணவிகள், 21 நிமிடம் யோகாசனம் செய்து உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டனர்.
உடலுக்கும், மனதிற்கும் புத்துணர்வை ஏற்படுத்திடும் யோகா மற்றும் தியானங்களில் பல்வேறு தரப்பினரும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் ஆயிரத்து 201 மாணவ மாணவிகள் 21 நிமிடங்கள் தொடர்ந்து பல்வேறு ஆசனங்களை செய்து காண்பித்தனர். சாதனை புத்தக நடுவர்கள் மற்றும் பார்வையாளர்கள் முன்னிலையில் செய்த இந்த யோகாசனங்கள் யோகாசன உலக சாதனை புத்தகமான, பதஞ்சலி புக் ஆப் ரெக்கார்ட்சில் பதியப்பட்டு அதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.