கிராமங்களின் வளர்ச்சிக்கு, மாணவர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் - சென்னையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பேச்சு
Nov 13 2019 9:12AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கிராம வளர்ச்சிக்கும், நாட்டின் முன்னேற்றத்திற்கும் மாணவர்கள் உறுதுணையாக திகழ வேண்டும் என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.
சென்னையை அடுத்த வண்டலூர் அருகே கல்லூரி ஒன்றில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட மத்திய ஜவுளி மற்றும் பெண்கள், குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, முனைவர், முதுகலை உட்பட ஆயிரத்து 701 பட்டங்களை மாணவ, மாணவிகளுக்கு வழங்கினார்.
பின்னர் பேசிய அவர், மாணவர்களை விட மாணவிகள் அதிகளவில் பட்டம் பெற்றிருப்பது மகிழ்ச்சியளிப்பதாக குறிப்பிட்டார்.
கிராமங்களில்தான் இந்தியா வாழ்கிறது என்ற மகாத்மா காந்தியின் வார்த்தைகளை உணர்ந்து கிராம வளர்ச்சி முன்னேற்த்திற்கும், நாட்டின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கும் மாணவர்கள் உறுதுணையாக திகழ வேண்டும் என கேட்டுக்கொண்டார்.