வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பல லட்சம் ரூபாய் மோசடி - பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறையினரிடம் புகார்
Nov 13 2019 3:02PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பல லட்சம் ரூபாய் மோசடி செய்தவர் மீது ராமநாதபுரம் எஸ்.பி.யிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர்.
ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. பட்டினம்காத்தான் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார், தங்கப்பா நகர் பகுதியைச் சேர்ந்த கூரி மணி, வெளிப்பட்டினத்தைச் சேர்ந்த சீனி அலாவுதீன் ஆகியோர் மாவட்ட எஸ்பியிடம் புகார் மனு அளித்தனர். அதில், ராமநாதபுரம் சேதுபதி நகரில் டிராவல்ஸ் வைத்திருக்கும் செல்வம் என்பவர், வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக்கூறி பல லட்சம் ரூபாய் வாங்கிக்கொண்டு ஒன்றரை வருடங்கள் ஆகியும் தங்களை வெளிநாட்டுக்கு அனுப்பாமல் அலைக்கழித்து வருவதாக புகார் தெரிவித்தனர். மேலும், தங்களது பாஸ்போர்ட்டை வைத்துக்கொண்டு தர மறுப்பதாகவும் தெரிவித்தனர்.