நடிகர் சிவகார்த்திகேயனின் 'ஹீ‍ரோ' படத்தை ‍வெளியிட தடை : சென்னை உயர் நீதிமன்ற நடுவர் மையம் உத்தரவு

Nov 14 2019 3:11PM
எழுத்தின் அளவு: அ + அ -

நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் ஹீரோ படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து, சென்னை உயர்நீதிமன்ற நடுவர் மையம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ஹீரோ திரைப்படம், வரும் டிசம்பர் 20-ம் வெளியிட 24 பிலிம்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்நிறுவனத்தின் பங்குதாரர்களான ராஜா, பிரபு, ஜெயதேவி ஆகியோர், டி.எஸ்.ஆர்., பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் பேட்ரிக் ஹென்றி என்பவரிடம் இருந்து, 2018-ம் ஆண்டில், 10 கோடி ரூபாய் கடன் பெற்றனர். இதுவரை பணத்தை திருப்பி செலுத்தவில்லை.

இந்நிலையில், ஹீரோ படத்தை, கே.ஜி.ஆர் பிலிம் நிறுவனத்தின் மூலமாக வெளியிட 24 பிலிம்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்கிடையே, ஹீரோ படத்தை வெளியிட தடை ‍கோரி, சென்னை உயர்நீதிமன்ற நடுவர் மையத்தில், டி.எஸ். ஆர்., பிலிம்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த நடுவர் மையம், ஹீரோ படத்தை வேறு தலைப்பில் வெளியிடவும், வேறு நிறுவனங்களில் பெயரில் வெளியிடவும் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டு, வழக்கு விசாரணை டிசம்பர் 2-ம் தேதிக்கு தள்ளி வைத்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00