தமிழகத்தில் பள்ளிகளில் மாணவர்கள் தண்ணீர் பருக 10 நிமிடம் ஒதுக்கப்படும் - விரைவில் அரசாணை வெளியிடவுள்ளதாக தகவல்
Nov 14 2019 8:43PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பள்ளிகளில் ஒவ்வொரு வகுப்பு முடிந்ததும் மாணவர்கள் தண்ணீர் பருக 10 நிமிடங்கள் ஒதுக்குவது தொடர்பாக விரையில் அரசாணை வெளியிடப்படும் என, பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
கேரள மாநிலத்தில், பள்ளி மாணவர்களுக்கு தண்ணீர் குடிக்க வைக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக, பாடவேளைகளில் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோல தமிழகத்திலும் பள்ளி மாணவர்கள் ஒவ்வொரு வகுப்பு முடிந்தபின்னர் தண்ணீர் குடிக்க, 10 நிமிடங்கள் ஒதுக்கி அரசாணை பிறப்பிக்கப்படும் என, பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இத்திட்டத்தை கர்நாடகா அரசும் பின்பற்ற முடிவு செய்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை அம்மாநில கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.