நாகையில் இயற்கையான முறையில் களைகளை கட்டுப்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம்
Nov 14 2019 8:07PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாகையில், இயற்கையான முறையில் களைகளை கட்டுப்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு, செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
நாகை மாவட்டம், கண்டமங்கலம் கிராமத்தில் இயற்கை விவசாய முறைகள் குறித்து, விவசாயிகளுக்கு வயல்வெளியில் களப்பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியை ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் கோவை வேளாண் பல்கலைக்கழகம் இணைந்து வழங்கியது. இந்த பயிற்சியில், இயற்கையான முறையில் களை எடுப்பது, கோனோவீடர் கருவியை பயன்படுத்தி களை எடுப்பது, உரமிடுவது உள்ளிட்டவை குறித்து விவசாயிகளுக்கு, செயல்முறைகளுடன் விளக்கத்துடன் கூடிய நேரடி பயிற்சி அளிக்கப்பட்டது.