சென்னை ஐஐடியில் தற்கொலை செய்து கொண்ட மாணவி பாத்திமா லத்தீப் இறப்புக்கு நீதி கேட்டு மாணவர்கள் ஐஐடி வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
Nov 14 2019 8:48PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை ஐஐடியில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வந்த கேரள மாணவி, பாத்திமா லத்தீப் கடந்த 8-ம் தேதி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தன்னை மதரீதியாக பேராசிரியர் சுதர்சனம் பத்மநாபன் துன்புறுத்தியதாகவும், அதன் காரணமாகவே தான் தற்கொலை செய்து கொண்டதாகவும் பாத்திமா செல்போனில் பதிவு செய்து வைத்திருந்தாக தெரிகிறது. இந்த சம்பவத்தில் மாணவி பாத்திமாவுக்கு நீதி கேட்டு , சுதர்சனம் பத்மநாபனை கைது செய்ய வலியுறுத்தி, சமூகநீதி மாணவர் இயக்கத்தினர், ஐஐடி வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல், ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணத்திற்கு நீதி கேட்டு, முஸ்லிம் மாணவர் பேரவை என்ற மாணவர் அமைப்பினர், சென்னை ஐஐடி நுழைவாயிலில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.