5 நிமிடம் 54 விநாடிகளில் 200 திருக்குறளை ஒப்புவித்த 3-ம் வகுப்பு மாணவி : சிறுமியின் நினைவாற்றலைப் பாராட்டி பரிசு வழங்கிய மாவட்ட ஆட்சியர்
Nov 15 2019 9:59AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருவள்ளூரில், மூன்றாம் வகுப்பு மாணவி, 200 திருக்குறளை, 5 நிமிடம் 54 விநாடிகளில் ஒப்பித்து, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
திருவள்ளூரைச் சேர்ந்த சகஸ்கர நேத்ரா, அங்குள்ள தனியார் பள்ளியொன்றில், மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இந்த மாணவி, 200 திருக்குறளை, எந்தவித பிழையும், தடுமாற்றமும் இன்றி, 5 நிமிடம் 54 நொடிகளில் ஒப்புவித்து, அனைவரையும் வியக்க வைத்தார்.
மூன்றாம் வகுப்பு மாணவி சகஸ்கர நேத்ராவின் நினைவாற்றலைக் கண்டு வியந்த மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி, சிறுமியை பாராட்டி, பரிசு வழங்கி கெளரவித்தார்.