ஐ.ஐ.டி., மாணவி பாத்திமா மரணம் குறித்து விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவு - மத்திய உயர்கல்வித் துறை செயலாளர் சென்னை வருகை

Nov 17 2019 4:19PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னை ஐ.ஐ.டி., மாணவி பாத்திமா மரணம் குறித்து விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், மத்திய உயர்கல்வித் துறை செயலாளர் திரு.சுப்பிரமணியன் சென்னை வந்துள்ளார்.

சென்னை ஐ.ஐ.டி.,யில் முதலாமாண்டு படித்த பாத்திமா லத்தீப் என்ற மாணவி, அண்மையில் தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய கடிதத்தில்,‍ பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் தொந்தரவால் தற்கொலை செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. பாத்திமா மரணம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று அவரது தந்தை அப்துல் லத்தீப், தமிழக அரசை வலியுறுத்தி உள்ளார். மேலும், இது தொடர்பான கூடுதல் ஆவணங்களையும் காவல் துறையிடம் அவர் சமர்ப்பித்துள்ளார்.

இதற்கி‌‌டையே, மாணவி பாத்திமா மரணம் குறித்து, மத்திய குற்றப்பிரிவு விசாரணை நடத்தும் என்று சென்னை மாநகர காவல் ஆணையர் திரு. விஸ்வநாதன் தெரிவித்தார். இந்நிலையில், மாணவி பாத்திமா மரணம் குறித்து உரிய விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கும்படி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, மத்திய உயர்கல்வித் துறை செயலாளர் திரு.சுப்பிரமணியன் சென்னை வந்துள்ளார். இவர், மாணவி பாத்திமா மரணம் குறித்து, விசாரணை நடத்துவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00