இ.பி.எஸ். , ஓ.பி.எஸ். அணியில் இருந்தும், திமுக கட்சியில் இருந்தும் 50க்கும் மேற்பட்டோர் அமமுகவில் இணைந்தனர்
Nov 20 2019 12:37PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இ.பி.எஸ். , ஓ.பி.எஸ். அணியில் இருந்தும், திமுக கட்சியில் இருந்தும் 50க்கும் மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் தங்களை இணைத்துக்கொண்டனர்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழக திண்டுக்கல் கிழக்கு, மேற்கு மாவட்ட கழகம் சார்பில் உள்ளாட்சித் தேர்தல் குறித்து மாவட்ட நகர ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகளுக்கு மற்றும் தொண்டர்களுக்கு ஆலோசனை கூட்டம் திண்டுக்கல்லில் கிழக்கு நடைபெற்றது. இதில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து ஏராளமானோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் திமுக உள்ளிட்ட மாற்று கட்சியினர் பலர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.