வேதாரண்யத்தில் கணவன் மனைவி விஷம் அருந்தி தற்கொலை : காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை
Nov 20 2019 12:47PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வேதாரண்யத்தில் கணவன் மனைவி விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த மோட்டாண்டிதோப்பு பகுதியில் வேதராசு அவரது மனைவி வசந்தா ஆகிய இருவரும் தனியாக ஒரு வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில் வெகுநேரமாகியும் வீட்டின் கதவு திறக்கப்படாத நிலையில் மதியம் அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்தபோது கனவன் மனைவி இருவரும் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டு கிடப்பது தெரியவந்தது. இது குறித்து வேதாரண்யம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், இருவரது உடலையும் கைப்பற்றி வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பிவைத்தனர். கணவன் மனைவி இருவரும் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் கடன் பிரச்சனையா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.