உசிலம்பட்டி பகுதிகளில் அதிகம் விளையும் பிச்சிப் பூ : போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் வேதனை
Nov 20 2019 1:00PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உசிலம்பட்டி பகுதிகளில் பிச்சிப் பூக்களுக்கு போதிய விலை கிடைக்காததால், அவற்றை பறிக்காமல் விவசாயிகள் செடியிலே விட்டுவிடுகின்றனர். இதனால் அவர்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வகுரணி, சந்தைப்பட்டி, கல்லூத்து போன்ற பகுதிகளில் பூக்கள் அதிகளவில் பயிராகின்றன. இந்த வருடம் விவசாயிகள் பிச்சிப்பூக்களை அதிகம் பயிரிட்டுள்ளனர். பொதுவாக கார்த்திகை மார்கழி மாதங்களில் பிச்சிப்பூ அதிக விலை போகும். தொடர் மழை காரணமாக தற்போது பிச்சிப்பூக்களின் வரத்து அதிகரித்துள்ளது. ஆனால்; உசிலம்பட்டி சந்தையில் பிச்சிப்பூக்களுக்கு போதிய விலை இல்லை. உசிலம்பட்டி சந்தையில் பிச்சிப்பூ 1 கிலோ ரூ.80 முதல் அதிகபட்சம் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகின்றது. இந்த பிச்சிப்பூக்களை பறிக்க ஒருவருக்கு ரூ.150 சம்பளமாக வழங்கப்படுகிறது.இதனால் பூ பறிக்கும் கூலி கூட கிடைக்காததால் விவசாயிகள் பூக்களை பறிக்காமல் செடியிலேயே விட்டு விடும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.