சிதம்பரத்தில் உள்ள ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் பாதிக்கப்பட்ட குழந்தை - உரிய இழப்பீடு கோரி தந்தை புகார்
Dec 7 2019 2:44PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உள்ள ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு, நஷ்டஈடு வழங்க வேண்டும் எனக்கோரி சிதம்பரம் சார் ஆட்சியரிடம் குழந்தையின் தந்தை புகார் அளித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்த அண்ணாமலைநகர் பகுதியை சேர்ந்த சரோஜினி, சண்முகநாதன் தம்பதியினர், கடந்த ஜனவரி மாதம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில், தங்களது 3 மாத குழந்தை சிவகார்த்திக்கை சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அப்போது ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் தவறான சிகிச்சை அளித்ததால் குழந்தையின் கணையம் பாதிக்கப்பட்டதாக பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். பாதிக்கப்பட்ட குழந்தைக்கு கடலூர், புதுவை, சென்னை, மும்பை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் குழந்தையின் பெற்றோர் சிதம்பரம் சார் ஆட்சியர் விசு மகாஜனிடம் புகார் அளித்தனர். குழந்தை மூளைச்சாவு அடைந்து விட்டதாக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் கூறினார்கள் ஆனால் குழந்தை மூளைச்சாவு அடையவில்லை என புதுவை ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்ததாகவும் புகார் தெரிவித்த குழந்தையின் தந்தை சண்முகநாதன் குழந்தையை காப்பாற்ற இதுவரை 17 லட்ச ரூபாய் செலவு செய்து உள்ளதாகவும், ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உரிய இழப்பீடு வங்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.