நெல் ஜெயராமனின் முதலாமாண்டு நினைவஞ்சலி : நெல் ஜெயராமனின் பெயரில் விருது வழங்க அரசுக்கு கோரிக்கை
Dec 7 2019 3:35PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நூற்றுக்கணக்கான பாரம்பாரிய அரியவகை நெல் ரகங்களை மீட்டெடுத்த நெல் ஜெயராமனின் முதலாமாண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்ற விவசாயிகள் நெல் ஜெயராமனின் பெயரில் விருது வழங்கிட தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
காலப்போக்கில் நம்மிடம் இருந்து மறைந்த நூற்றுக்கணக்கான அரியவகை நெல் ரகங்களை மீட்டெடுத்த நெல் ஜெயராமனின் முதலாமாண்டு நினைவஞ்சலி ஆதிரெங்கம் கிராமத்தில் நடைபெற்றது. இதில் திரளான விவசாயிகள் மட்டுமின்றி பள்ளி மாணவ மாணவிகளும் கலந்து கொண்டு மறைந்த நெல் ஜெயராமனின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய விவசாயிகள், தமிழக அரசு நெல் ஜெயராமன் பெயரில் சிறந்த விவசாயிகளுக்கு விருது வழங்க வேண்டும், அரசு வேளாண் ஆராய்ச்சி மையம் தொடங்க வேண்டும் என வலியுறுத்தினர்.