கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிக்கையை முன்னிட்டு கேக் தயாரிக்கும் திருவிழா தொடக்கம் - பிரபல சமையல் கலைஞர் தாமு பங்கேற்பு
Dec 7 2019 4:43PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த தனியார் நட்சத்திர விடுதியில், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிக்கையை முன்னிட்டு, கேக் தயாரிக்கும் திருவிழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பிரபல சமையல் கலைஞர் தாமு கலந்து கொண்டார். முந்திரி, திராட்சை, பிஸ்தா, பாதாம், ஜெர்ரி உள்ளிட்ட உலர் பழங்களோடு விலையுயர்ந்த ஓயின் சேர்த்து கேக் தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டது. டிசம்பர் 20-ம் தேதிவரை நன்றாக ஊராக வைத்து, கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று, 15 கிலோ கேக் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.