சென்னை அருகே சாலையில் தவறவிடப்பட்ட பையை கண்டெடுத்த காவலர் : தங்க நகைகள், விலை உயர்ந்த பொருட்கள் உரியவரிடம் ஒப்படைப்பு - பொதுமக்‍கள் பாராட்டு

Dec 7 2019 4:54PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னை அருகே தண்டையார்பேட்டை பகுதியில் சாலையில் ஆதரவற்ற கிடந்த, விலை உயர்ந்த தங்க நகைகள் மற்றும் வெளிநாட்டு பொருட்களை காவல்நிலையத்தில் ஒப்படைத்த காவலரை, பொதுமக்‍கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். கார்த்திகை செல்வன் என்பவர், திருவொற்றியூர் சாத்தாங்காடு காவல்நிலைய ஆய்வாளருக்கு ஓட்டுனராக பணி புரிந்து வருகிறார். நேற்றிரவு பணி முடிந்து திரும்பியபோது, அப்பர் சாமி சாலையில் பாலிதீன் பை ஒன்றை கண்டெடுத்தார். அதனுள் தங்க நகைகள் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் இருப்பதை கண்டு, காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். பட்டாளத்தை சேர்ந்த விக்னேஷ் என்பவர், தன்னுடைய நகைகள் தவறவிட்டுவிட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். விக்‍னேஷ் தவற விட்ட பொருட்கள் அவைதான் என்பது உறுதி செய்யப்பட்ட பின்னர், அவரிடம் ஒப்படைக்‍கப்பட்டன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00