தெலங்கானாவில் காவல்துறையினர் நீதியை நிலைநாட்டியிருப்பதாக நடிகை நயன்தாரா பாராட்டு
Dec 7 2019 5:54PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தெலங்கானாவில் காவல்துறையினர் நீதியை நிலைநாட்டியிருப்பதாக நடிகை நயன்தாரா தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத் என்கவுன்ட்டர் குறித்து நடிகை நயன்தாரா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ஹைதராபாத்தில் பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த குற்றவாளிகளை சுட்டுக்கொன்றது, சரியான நேரத்தில் கிடைத்த நீதி என்றும், நியாயமான மனிதம் மிக்க நடவடிக்கை என்றும் தெரிவித்துள்ளார்.
நாட்டில் பெண்களின் பாதுகாப்பையும் முன்னேற்றத்தையும் உறுதி செய்வது நமது கடமை என அவர் குறிப்பிட்டுள்ளார். நம் ஆண் குழந்தைகளுக்கு பெண்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என கற்றுக் கொடுக்க வேண்டும் என்றும், பெண்களை மதித்து பாதுகாப்பவனே "நாயகன்" என ஆண் குழந்தைகள் மனதில் அழுத்தமாக பதிய வைக்க வேண்டும் என்றும் நடிகை நயன்தாரா தெரிவித்துள்ளார்.