அ.ம.மு.க. கட்சியாக பதிவு செய்யப்பட்டதை தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருவதாக டிடிவி தினகரன் பெருமிதம் - ஆட்சி சுகத்திற்காக மட்டுமே இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். உடன் தொண்டர்கள் இருப்பதாகவும் விமர்சனம்
Dec 8 2019 6:28PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் ஒருவேளை ஆளுநர் ஆட்சி இருந்தால், பொள்ளாச்சி விவகாரத்தில் தெலங்கானா நடவடிக்கைப் போன்று இருந்திருக்கும் என, அ.ம.மு.க பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் தெரிவித்தார்.
தருமபுரி மாவட்டம் அரூரிலிருந்து வாழப்பாடிக்கு வருகை தந்த அ.ம.மு.க பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரனுக்கு, சேலம்-ஆத்தூர் செல்லும் சாலையில், வாழப்பாடி சுங்கச்சாவடி அருகே, சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் திரு.எஸ்.கே.செல்வம் மற்றும் கழகத் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
சேலம் கிழக்கு மாவட்டத் தலைவர் திரு. சண்முகத்தின் மகன் திரு. கோகுல் - மணமகள் ஜனனி ஆகியோரது திருமணம் அண்மையில் நடைபெற்றது. சேலம் மாவட்டம் வாழப்பாடியில், மணமக்கள் இல்லத்திற்கு திரு.டிடிவி தினகரன் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் திரு.எஸ்.கே.செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகள் அப்போது உடனிருந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திரு.டிடிவி தினகரன், கட்சிப் பதிவை தொண்டர்கள் விழாவாகக் கொண்டாடி வருவதாகவும், பதவி சுகத்திற்காக மட்டுமே ஓ.பி.எஸ், இ.பி.எஸ்சுடன் ஒருசிலர் இருப்பதாகவும் தெரிவித்தார்.