இடிந்து விழும் நிலையில் மதுரை பாலமேடு அரசு கால்நடை மருத்துவமனை கட்டடம் : அச்சத்துடன் பணிபுரியும் மருத்துவர்கள்
Dec 9 2019 11:18AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரை பாலமேடு அரசு கால்நடை மருத்துவமனையின் மேற்கூரை அடிக்கடி இடிந்து விழுவதால் மருத்துவர்கள் அச்சத்துடனேயே பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த கால்நடை மருத்துவமனை கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது. பழைமையான கட்டிடம் என்பதால் அதன் மேற்கூரை அடிக்கடி பெயர்ந்து விழுகிறது. இதனால், கட்டிடத்துக்கு வெளியே நின்றவாறே கால்நடைகளுக்கு மருத்துவர்கள் சிகிச்சையளிக்கின்றனர். அடுத்த மாதம் அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிகட்டு போட்டிகள் நடைபெறவுள்ளதால், ஏராளமான காளைகள் மருத்துவ பரிசோதனைக்காக இங்கு அழைத்துவரப்படவுள்ளன. எனவே, அதற்குள் மருத்துவமனையை புணரமைக்க வேண்டும் என மருத்துவர்களும் அப்பகுதி மக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.