ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
Dec 9 2019 1:30PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய 3 மாவட்டங்களில், கன மழைப் பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு தென்கிழக்கே தென்மேற்கு வங்ககடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சியின் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில், அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய 3 மாவட்டங்களில் கன மழைப் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யும் என்றும் குறிப்பிட்டுள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.