அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் பதிவு செய்யப்பட்டதற்கான கடிதத்தை கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனிடம் இந்திய தேர்தல் ஆணையம் வழங்கியது
Dec 9 2019 2:49PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் பதிவு செய்யப்பட்டதற்கான கடிதத்தை கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரனிடம் இந்திய தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தேர்தல் ஆணையத்தில் முறைப்படி கடந்த 6ம் தேதி பதிவு செய்யப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்கான அதிகாரப்பூர்வமான கடிதத்தை கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரனுக்கு இந்திய தேர்தல் ஆணையம் இன்று வழங்கியுள்ளது. அதில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் பதிவு செய்யப்படுவதாகவும், இது நவம்பர் மாதம் 25ம் தேதி முதல் நடைமுறைக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் பதிவு எண் உள்ளிட்ட விவரங்கள் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், பதிவு செய்யப்பட்டதற்கான கடித நகலை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி, மாநில தேர்தல் ஆணைய அதிகாரி உள்ளிட்டோருக்கு அனுப்பிவைத்துள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.