திருவண்ணாமலை தீபத்திருவிழாவை முன்னிட்டு களைகட்டிய குதிரை, மாடுகள் சந்தை - வியாபாரிகள் மகிழ்ச்சி
Dec 9 2019 5:30PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருவண்ணாமலை தீபத்திருவிழாவை முன்னிட்டு, குதிரை மற்றும் மாடுகள் சந்தை களைக்கட்டியுள்ளது.
கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 1-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. தீப திருவிழாவை முன்னிட்டு, கடைசி மூன்று நாட்கள் கிரிவலப்பாதை செங்கம் சாலையில், குதிரை மற்றும் மாடுகள் சந்தை தொடங்கியுள்ளது. ஜெர்சி, ஓங்கோல், கீர் உள்ளிட்ட வகையான கறவை மாடுகளும், சப்ஜா, காட்டுவாடா, மார்வாடி, நாட்டுக் குதிரைகளும் சந்தையில் விற்பனை வந்துள்ளன. மாடுகள், சுமார் 5 ஆயிரம் முதல் 1 லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படும் என்றும், குதிரைகள் பத்தாயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய்வரை விற்பனை செய்யப்படும் என்றும், வியாபாரிகள் தெரிவித்தனர்.