மேட்டுப்பாளையத்தில் 17 பேர் உயிரிழந்த சம்பவம் : எதிர்க்கட்சியினர் அரசியல் செய்வதாக எடப்பாடி பழனிசாமி கூறுவது ஏற்புடையதல்ல என பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு குற்றச்சாட்டு
Dec 9 2019 5:41PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில், சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்த சம்பவத்தில், பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்காமல், எதிர்க்கட்சியினர் அரசியல் செய்வதாக எடப்பாடி பழனிசாமி கூறுவது ஏற்புடையதல்ல என பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திரு. பொழிலன் தெரிவித்துள்ளார்.
சென்னை பத்திரிகையாளர் சங்கத்தில், பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் தலைவர்கள் திரு. பொழிலன், திரு. கொளத்தூர் மணி, திரு. திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நடூர் பகுதியில் நிகழ்ந்த விபத்து தீண்டாமை சுவரின் காரணமாகவே ஏற்பட்டுள்ளது தெளிவாக தெரிய வந்துள்ளதாக குறிப்பிட்டனர்.