சென்னை வேப்பேரியில் உள்ள ஜெயின் மகளிர் கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி - 'காவலன்' செயலி பயன்பாடு குறித்து மாணவிகளுக்கு விளக்கம்
Dec 10 2019 9:28PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காவலன் செயலி குறித்து மாணவிகள் மத்தியில் எடுத்துரைக்கும் விதமாக, சென்னை வேப்பேரியில் உள்ள ஜெயின் மகளிர் கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் திரு.மனோகரன், வேப்பேரி உதவி ஆணையர் திருமதி. மகேஸ்வரி ஆகியோர் பங்கேற்று, காவலன் செயலியின் பயன்பாடு குறித்து, மாணவிகளுக்கு விளக்கினர். இதில், 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர்.