ஈரோடு மாவட்டத்தில் விவசாய தோட்டத்தில் புகுந்து சிறுத்தை அட்டகாசம் - 3 மாதத்தில் 20 ஆடுகளை தாக்கியதால் பொதுமக்கள் அச்சம்
Dec 10 2019 9:57PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே விவசாய தோட்டத்தில் புகுந்த ஆடுகளை வேட்டையாடி வரும் சிறுத்தையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பண்ணாரி வனப்பகுதிக்கு அருகே விவசாய நிலங்கள் அமைந்துள்ளன. அங்குள்ள விவசாய தோட்டத்தில் நேற்று இரவு புகுந்த சிறுத்தை ஒன்று ஆட்டு பட்டியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஆட்டுக்குட்டியை தாக்கியது. ஆடு கத்தும் சத்தம் கேட்டு அதன் உரிமையாளர் விஜயகுமார் ஓடி வந்து பார்த்தபோது சிறுத்தை ஆட்டைத் தூக்கி சென்றது. கடந்த 3 மாதமாக புதுவடவள்ளி, புது பீர் கடவு, புதுகுய்யனூர் ஆகிய கிராம பகுதியில் 20க்கும் மேற்பட்ட ஆடுகள், மூன்று நாய்கள், இரண்டு பசுமாடுகள் போன்றவை சிறுத்தை தாக்கி உயிரிழந்துள்ளன. இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.