திருச்சி அருகே, ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவி 14 லட்சம் ரூபாய்க்கு ஏலம் - ஊராட்சி தலைவர், துணை தலைவர் பதவிகளும் ஏலத்தில் விடப்படுவதாக புகார் - எடப்பாடி பழனிசாமி அணியினர் முறைகேட்டில் ஈடுபடுவதாக பொதுமக்கள் பகிரங்கக் குற்றச்சாட்டு
Dec 14 2019 11:14AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவி 14 லட்சம் ரூபாய்க்கும், ஊராட்சி தலைவர் பதவி 10 லட்சம் ரூபாய்க்கும், துணைத் தலைவர் பதவி 3 லட்சம் ரூபாய்க்கும் ஏலம் விடப்படுவதாக, புகார் எழுந்துள்ளது.
மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டது வாலையூர் ஊராட்சி. பாலையூர், ஸ்ரீபெரும்புதூர், கரியமாணிக்கம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு, வாலையூர் ஊராட்சியில், நேற்று முன்தினம் இரவு, ரகசியமாக ஏலம் விடப்பட்டுள்ளது. ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு, தொகுதி அதிமுக பெண் எம்எல்ஏ பரமேஸ்வரியின் கணவர் முருகன் பெயரில் 14 லட்சத்திற்கும், தலைவர் பதவி 10 லட்சத்திற்கும், துணைத் தலைவர் பதவி 3 லட்சம் ரூபாய்க்கும் ஏலம் விடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, மண்ணச்சநல்லூர் ஒன்றிய தேர்தல் வார்டு அலுவலர் சண்முகத்திடம், அப்பகுதி மக்கள், புகார் கொடுத்தனர். ஏலம் நடைபெற்றது குறித்து உரிய விசாரணை நடத்தி, மாவட்ட ஆட்சியரிடம் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும் என, தேர்தல் அலுவலர் உறுதி அளித்துள்ளார்.