நாகை மாவட்டத்தில் சம்பா சாகுபடி நெற்பயிர்கள் மீது தெளிக்கப்பட்ட விஷக்கொல்லி மருந்து - 4 ஏக்கர் பரப்பளவிலான பயிர்கள் கருகி சேதம்
Dec 14 2019 1:12PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாகை மாவட்டம் கீழ்வேளுர் அருகே விவசாய நிலத்தில் விஷக்கொல்லி மருந்தை தெளித்ததால், பயிர்கள் முற்றிலும் கருகி விட்டன. அங்குள்ள நோத்தூர் கிராமத்தை சார்ந்த விவசாயி பாண்டியன் என்பவருக்கும், அவருடைய உறவினர் வேணுகோபால் என்பவருக்கும் இடையே, சொத்து தகராறு இருந்த தாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பாண்டியனின் நிலத்தில் பயிர்கள் மீது மர்ம நபர்கள் கொடிய விஷகொல்லி மருந்தை தெளித்துள்ளனர். கதிர் வரும் பருவத்தில் இருந்த சம்பா பயிர்கள் இதனால் சேதமடைந்தன.