கன்னியாகுமரியில் மூணு நம்பர் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டதாக 3 பேர் கைது
Dec 14 2019 3:32PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கன்னியாகுமரியில் மூணு நம்பர் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டதாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து லாட்டரி சீட்டுகள் கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிகளவு புழக்கத்தில் விடப்படுகின்றன. நாகர்கோவிலில் உள்ள வடசேரி பகுதியில் மூணு நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட வடசேரி போலீசார், பூதப்பாண்டியை சேர்ந்த அருண், ஊட்டுவாழ் மடத்தைச் சேர்ந்த விக்னேஷ் பாண்டியன் மற்றும் கிருஷ்ணன்கோயிலை சேர்ந்த சுரேஷ் ஆகியோர் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.