தஞ்சையில் பல ஏக்கர் பரப்பில் நெற்பயிர்களை தாக்கிய யானைக்கொம்பன் பூச்சி : வாழ்வாதாரத்தை இழந்து விவசாயிகள் வேதனை
Dec 15 2019 4:42PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தஞ்சையில், பல ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட நெற்பயிர்களை யானைக்கொம்பன் பூச்சி தாக்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் அப்பகுதியில் நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. பட்டுக்கோட்டை அருகில் பண்ணவயல் கிராமத்தில் பல ஏக்கர் பரப்பில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள், யானைக்கொம்பன் பூச்சி தாக்கி பயிர்கள் சேதமடைந்தன. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்தவொரு பதிலும் கிடைக்கவில்லை என புகார் தெரிவித்துள்ளனர்.