28 ஆயிரம் புள்ளிகளைத் தாண்டி, புதிய உச்சத்தை எட்டியது மும்பை பங்குச்சந்தை - இதற்கு முன் இல்லாத வகையில் அதிகரிப்பு
Nov 10 2014 7:04AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், இதற்கு முன் இல்லாத வகையில், 28 ஆயிரம் புள்ளிகளைத் தாண்டி, புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
மும்பையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும், சென்செக்ஸ், நிஃப்டி ஆகிய 2 பங்குச்சந்தைகளின் குறியீட்டு எண்களும் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்வு கண்டன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், முதன் முறையாக 28 ஆயிரத்து 28 புள்ளிகள் என்ற உச்சத்தை அடைந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டியும், புதிய உச்சம் கண்டது. தொடர்ச்சியாக வெளிநாட்டு நிதி வருகை மற்றும் சில்லறை முதலீட்டாளர்கள் மத்தியில் பங்குகளை வாங்கும் போக்கு அதிகரித்து வருவது உள்ளிட்ட காரணங்களால், பங்குச்சந்தை குறியீட்டு மதிப்பு புதிய உச்சத்தை அடைந்துள்ளதாக பங்கு வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.